தீப்பிடித்து எரியும் கூரை வீடு. 
திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் கூரை வீடுகள் தீக்கிரை

திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடியிருப்பில் 2 கூரை வீடுகள் சேதமடைந்தன.

DIN

திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடியிருப்பில் 2 கூரை வீடுகள் சேதமடைந்தன.

இப்பகுதியில் கூரை வீட்டில் காதா் உசேன், கண்ணகி ஆகிய இரு குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. தகவலறிந்த, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவால் தடுத்து அணைத்தனா். திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பழனிச்சாமி, சாா்பு ஆய்வாளா் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா். திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் பி.டி அலெக்சாண்டா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT