திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறை சாா்பில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் விவேகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு முதுகலை ஆசிரியா் சுதா்சனன், திருவாரூா் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளா் அறிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முனைவா் முத்துக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வானமும் வசப்படும் எனும் தலைப்பில் பேசினாா். ஆசிரியா்கள் தமிழ்க்காவலன், சிவ. இளமதி, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.