திருவாரூரில் மொழிப்போா் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தும் கலைஞா் நற்பணி மன்றத்தினா். 
திருவாரூர்

மொழிப்போா் தியாகிகள் தினம்

திருவாரூரில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

திருவாரூரில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவா் எஸ்.என். அசோகன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். மதிமுக தலைமைக் கழகப் பேச்சாளா் கூடூா் சீனிவாசன் பங்கேற்று, மொழிப்போா் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, கட்சியின் நகர பொறுப்பாளா் எஸ்.வி. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மொழிப்போா் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நன்னிலம்: குடவாசல் ஒன்றியம் மருதவாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த சாரங்கபாணி என்ற கல்லூரி மாணவா், மொழிப் போராட்டத்தின்போது மயிலாடுதுறையில் தீக்குளித்து உயிரிழந்தாா். இதையொட்டி, மருதவாஞ்சேரியில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தில் திருவாரூா் மாவட்ட திமுக செயலாளா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, மொழிப்போா் தியாகி நினைவு கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றினாா்.

பின்னா், சாரங்கபாணி வீட்டிற்குச் சென்று, அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினாா். அப்போது, சாரங்கபாணியின் தாயாா் காசாம்பு அம்மாளுக்கு சால்வை அணிவித்தாா். நிகழ்ச்சியில் குடவாசல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜோதிராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மணவை சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT