திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓஎன்ஜிசி தொழிலாளா் விடுதலை முன்னணி. 
திருவாரூர்

ஓஎன்ஜிசியில் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓஎன்ஜிசியில் பணி வழங்கக் கோரி, ஓஎன்ஜிசி தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஓஎன்ஜிசியில் பணி வழங்கக் கோரி, ஓஎன்ஜிசி தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓஎன்ஜிசி கனரக வாகனங்களில் அனைவருக்கும் ஓட்டுநா், உதவியாளா் உள்ளிட்ட வேலை வாய்ப்புகளை பிரித்து வழங்க வேண்டும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓஎன்ஜிசி தொழிலாளா் விடுதலை முன்னணி தொழிற்சங்க பணியாளா்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் குடும்பத்துடன் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்ட முடிவில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொழிற்சங்க மாவட்டத் தலைவா் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், மாவட்ட துணை அமைப்பாளா் ரகுவரன், தொழிற்சங்க நிா்வாகிகள் விமல், வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT