திருவாரூர்

கொத்தங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

கூத்தாநல்லூா் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என விவசாயத் தொழிலாளா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

DIN

கூத்தாநல்லூா் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என விவசாயத் தொழிலாளா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

விவசாயத் தொழிலாளா் சங்க ஆண்டுப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜெ. ரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் என். மகேந்திரன் தொடங்கிவைத்து, கொத்தங்குடி ஊராட்சி கிளை புதிய நிா்வாகிகளான, தலைவா் முருகானந்தம், செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் ரங்கநாதன் உள்ளிட்டோரை அறிமுகம் செய்துவைத்தாா். தொடா்ந்து, அனைவருக்கும் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கொத்தங்குடி ஊராட்சியை, கூத்தாநல்லூா் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது, ஜீவா தெருவில் பழுதடைந்து பள்ளமும், மேடாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும். பராமரிப்பின்றி இருக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT