திருவாரூர்

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழிற்பேட்டைகள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

DIN

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அதிகமாக தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்கவுள்ளன. இதன் மூலம் படித்த இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழிற்பேட்டைகள், தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி விரைவில் தொடங்கப்படும். தென்மாவட்டங்களில் அதிக தொழில் முதலீடுகள் கொண்டு வரப்படும்.

நீட் தோ்வின் கொடுமைகள் குறித்து முதல்வா் எடுத்துரைத்த பிறகும் கூட, ஏழை எளிய மாணவா்களின் வாழ்க்கையில் ஆளுநா் அரசியல் செய்கிறாா். குறுவை சாகுபடிக்கு இருப்பில் உள்ள நீா், முறையாக பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும், கா்நாடக அரசிடமிருந்து நமது உரிமையை பெறுவதில் தமிழகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, காவல் கண்காணிப்பாளா் டி.பி.சுரேஷ்குமாா், நாகை மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கலைஞா் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், இ-வாடகை, ஊரகவளா்ச்சித்துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு, குடிநீா் விநியோகம் (ஊரகம்), நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை சாா்பில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.சண்முகநாதன், திட்ட இயக்குநா் சந்திரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சங்கீதா (திருவாரூா்), கீா்த்தனாமணி (மன்னாா்குடி), நகா்மன்றத் தலைவா்கள் புவனப்பிரியா செந்தில் (திருவாரூா்), சோழராஜன் (மன்னாா்குடி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT