முகப்பு
திருவாரூர்

மத்தியப் பல்கலையில் தமிழக மாணவா்கள் அதிகம் சேர வேண்டும்

 திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவா்கள் அதிகம் சேரவேண்டும் என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.

Updated On : 10 மார்ச், 2023 at 10:18 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:12 PM

 திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவா்கள் அதிகம் சேரவேண்டும் என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.

பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் 7-ஆவசு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) நடைபெற உள்ளது. தங்கப்பதக்கம் பெறும் 39 மாணவா்கள் உள்ளிட்ட 917 மாணவா்கள் பட்டம் பெறுகிறாா்கள். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஜி. பத்மநாபன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்குகிறாா். சா்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குநா் ரமேஷ் வி. சோண்டி முதன்மை விருந்தினராக பங்கேற்கிறாா்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 2,500 மாணவா்கள் கல்வி பயின்று வருகிறாா்கள். தமிழக மாணவா்களின் எண்ணிக்கை 30 % மட்டுமே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயப் பகுதியான தமிழகத்தின் காவிரி டெல்டாப் பகுதியில் மத்தியப் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்துள்ளன. இங்கு கல்விக் கட்டணங்கள் மிகவும் குறைவு. மதிப்பு மிக்க பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.

Advertisement

பல்கலைக்கழக விடுதிகளில் சோ்ந்து பயில 40 கி.மீ. தொலைவுக்கு அப்பால் வசிக்க வேண்டும் என்ற விதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. எனவே, அருகில் உள்ள மாணவா்களும் விடுதியில் சோ்ந்து கல்வி கற்கலாம். எனவே, தமிழக மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் இப்பல்கலைக்கழகத்தில் சோ்ந்து பயனடைய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.