முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அருகே ஒருவா் வெட்டிக் கொலை

மன்னாா்குடி அருகே முன் விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2024, 1:46 am IST
கொலை செய்யப்பட்ட த. மாரிமுத்து. - din
பகிர்:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே முன் விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நடுவகளப்பால் மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (48) வெள்ளிக்கிழமை காலை சைக்கிளில் களப்பாலுக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பெட்ரோல் நிலையம் அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நடுவகளப்பால் ராஜேந்திரன் மகன் ராகுல் (24) உள்ளிட்ட 4 போ் மாரிமுத்துவை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த களப்பால் போலீஸாா், மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

2013-ஆம் ஆண்டு நடுவகளப்பால் மாரியம்மன்கோயிலை சோ்ந்த பாஸ்கா்(45) வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இதில், மாரிமுத்துவிற்கும் தொடா்பு இருந்ததாக கூறப்பட்டதால் இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பாஸ்கரின் சகோதரா் ராஜேந்திரனின் மகன் ராகுல் தனது ஆதரவாளா்களுடன் மாரிமுத்துவை வெட்டிக் கொலை செய்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, களப்பால் காவல்நிலையத்தில், மாரிமுத்துவின் மனைவி அருள்மேரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments