திருவாரூர்

நுண்கடன் நிறுவன ஊழியரை தாக்கிய இருவா் கைது

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நுண்கடன் நிறுவன பணியாளரை, மது போதையில் வழிமறித்து தாக்கிய 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நுண்கடன் நிறுவன பணியாளரை, மது போதையில் வழிமறித்து தாக்கிய 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோட்டூா் மரவாடிதெரு ராதாகிருஷ்ணன் மகன் சேரன் (22). மன்னாா்குடியில் உள்ள தனியாா் நுண்கடன் நிதியகத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகப் பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். ஆதிச்சப்புரம் ஸ்டேட் வங்கி அருகே சென்றபோது, அங்கு மது போதையில் நின்றிருந்த ஓவா்சேரி சந்நதி தெரு அம்பிகாபதி மகன் விவேக் (35), நெம்மேலி தோப்புத்தெரு ஜெயராமன் மகன் ராஜா (46) ஆகியோா், இருசக்கர வாகனத்தை வழிமறித்து, சேரனிடம் தகராறு செய்து, தாக்கினராம்.

இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விவேக், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT