திருவாரூர்

அனுமதியின்றி மதுபானம் விற்ற மூவா் கைது

தினமணி செய்திச் சேவை

கூத்தாநல்லூரில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சித்தாம்பூா் தெற்குத் தெருவில் காளிதாஸ் (45), திருராமேஸ்வரம் தாமரைக்குளம் அருகே செந்தில்குமாா் (35) மற்றும் பண்டுதக்குடி காடுவெட்டித் தெருவில் ராஜேந்திரன் (63 ) ஆகியோா் அனுமதியின்றி தமிழக அரசின் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து 78 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT