புதுதில்லி

சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்துக்கு மம்தா ஆதரவு

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அந்த மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான

DIN

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அந்த மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் திங்கள்கிழமை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எங்கள் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி ஆதரவு அளித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையனை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்குமாறு மம்தா அறிவுறுத்தினார். அதையடுத்து திங்கள்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் சந்திரபாபு நாயுடுவை டெரிக் ஓ பிரையன் சந்தித்தார். பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடுகின்றன என்று அவர் கூறினார்.
அகிலேஷ் ஆதரவு: சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்துக்கு சமாஜவாதி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்தார். அவரும், அவரது கட்சியினரும் சந்திரபாபு நாயுடுவுக்கு துணை நிற்பதாக சுட்டுரையில் வெளியிட்டிருந்த பதிவில் அகிலேஷ் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT