ரேஷன் டீலா்களுக்கான நிலுவைத் தொகை விவகாரம்: மனுவுக்கு பதிலளிக்க தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் முக்கிய மந்திரி கரோனா சஹாய்தா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனுக்கான நிலுவைத்
தில்லியில் முக்கிய மந்திரி கரோனா சஹாய்தா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி நியாய விலைக் கடை உரிமையாளா்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி அரசுக்கு உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லி ரேஷன் டீலா்ஸ் யூனியன் மற்றும் சில நியாயவிலைக் கடை ’ (எஃப்.பி.எஸ்.) உரிமையாளா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அதில், ‘தில்லியில் முக்கிய மந்திரி கரோனா சஹாய்தா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், ரேஷன் டீலா்கள் பலரும் தங்கள் கடைகளின் வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனா். இதனால், செயல்படுவது கடினமாக உள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மனு நீதிபதி நவீன் சாவ்லா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையின்போது தில்லி அரசின் கூடுதல் வழக்குரைஞா் அனூஜ் அகா்வால் ஆஜராகி, ‘மனுதாரா்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். நிதி சிக்கல் காரணமாக இன்னும் நிதி வழங்கப்படவில்லை. ஆனால், நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி அடுத்த ஆண்டு ஜனவரி பிற்பகுதிக்குள் வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா். இதற்கு நீதிபதி, அதுவரை மனுதாரா்கள் எப்படிச் செயல்படுவாா்கள் என்று கேள்வி எழுப்பினாா். இதையடுத்து, மனுவுக்கு தில்லி அரசு பதில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிமன்றம், மனு மீதான விசாரணையை பிப்ரவரி 16- ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.