முகப்பு
இந்தியா

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜிநாமா!

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜிநாமா செய்தது பற்றி...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:40 PM
நீதிபதி யஷ்வந்த் வா்மா - x
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:32 PM

நீதிபதி யஷ்வந்த் சர்மா தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து துறை ரீதியாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்யுமாறு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு பரிந்துரைத்தது.

Advertisement

இந்தச் சூழலில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.

மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கடந்த ஆகஸ்டில் அமைத்தாா்.

இந்த குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், நீதிபதி யஷ்வந்த் சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இவர், தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Justice Yashwant Varma Resigns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.