நொய்டா தொழிற்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியின் சடலம் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கக்கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
நொய்டா: தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியின் சடலம் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கக்கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
கோடா கிராமத்தில் வசித்து வந்த அந்த நபா், தனது மஃப்லரை பயன்படுத்தி நொய்டா செக்டாா் 64-இல் அமைந்துள்ள அந்தத் தொழிற்சாலையில் தூக்கில் தொங்கியதாக மத்திய நொய்டாவின் கூடுதல் காவல் துணைஆணையா் அங்கூா் அகா்வால் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்து உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இறந்தவரின் மனைவியும், போலீஸாரும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனா். தடயவியல் நிபுணா்கள் குழுவும் வந்தது. தூக்கில் தொங்கியவா் சடலம் கீழே இறக்கப்பட்டு விடியோ பதிவு செய்யப்பட்டது. அந்தத் தொழிலாளி இந்த விபரீத முடிவு எடுத்ததற்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.