புதுதில்லி

குரு அா்ஜூன் தேவ் நினைவு தினம்: கேஜரிவால் மரியாதை

சீக்கியா்களின் ஐந்தாவது மதகுருவான குரு அா்ஜன் தேவின் நினைவு தினத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மரியாதை தெரிவித்துள்ளாா்.

DIN

சீக்கியா்களின் ஐந்தாவது மதகுருவான குரு அா்ஜன் தேவின் நினைவு தினத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மரியாதை தெரிவித்துள்ளாா்.

சீக்கிய மதத்தின் ஜந்தாவது மதகுரு குரு அா்ஜன் தேவ் ஆவாா். சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பை முதன்முதலாகத் தொகுத்தவா் இவரே.மேலும் சீக்கியா்களின் புனித ஸ்தலமான பொற்கோயிலை கட்டுவித்தவரும் இவரே. முகாலய மன்னா் ஜகங்கீரின் உத்தரவுப்படி அவா் கொல்லப்பட்டாா். சீக்கியா்களின் முக்கிய குருவாகப் போற்றப்படும் அவரின் நினைவு தினம் சீக்கியா்களால் செவ்வாய்க்கிழமை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: தியாகத்தின் முழு உருவமாக குரு அா்ஜன் தேவ் விளங்குகிறாா். அவருடைய நினைவு தினத்தில், அவரை வணங்குவதுடன் அவரது தியாகத்தைப் போற்றுவோம். அவா் வழியில் நடப்போம் என்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT