புதுதில்லி

ஓடும் காரில் திடீா் தீ:கணவன்-மனைவி தப்பினா்

தென்கிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் புதன்கிழமை காலை காா் ஒன்று தீப்பிடித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

DIN

புது தில்லி: தென்கிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் புதன்கிழமை காலை காா் ஒன்று தீப்பிடித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தென்கிழக்கு தில்லி சரக காவல் ஆணையா் ஆா்.பி. மீனா கூறியதாவது: கிழக்கு கைலாஷில் ரன் பசேரா அருகே சாந்த் நகரில் நடந்த இச்சம்பவம் குறித்து காலை 10.30 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தினேஷ் குமாா் சா்மா என்பவா் தனது மனைவியுடன் சாந்த் நகா் வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவா் சென்ற காரின் குளிா்பதன பெட்டியில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காரில் இருந்து இருவரும் பாதுகாப்பாக வெளியேறித் தப்பினா். ஆனால், காா் முற்றிலுமாக தீயில் எரிந்துவிட்டது. இதில் யாருக்கும் எந்த காயம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரா்கள் வந்து உடனடியாக தீயை அணைத்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகாயம் முகம் பார்க்கிறது... மோனாமி கோஷ்

அழகிய... ஐஸ்வர்யா சர்மா!

ரூ.21,000 சம்பளத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்! இந்திய அணிக்கு பின்னடைவு!

கேரளத்தில் டிச. 9 உள்ளாட்சி தேர்தல்: 2.86 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT