கரோனா போராளிகள், ராணுவத்தினா், விவசாயிகளுக்கு தலை வணங்குகிறேன்: முதல்வா் கேஜரிவால்
நாட்டின் குடியரசு தின விழா கொண்டாடப்படும் தினத்தில், கரோனா போராளிகள், துப்புரவுத் தொழிலாளா்கள், ராணுவ வீரா்கள், விவசாயிகள் ஆகியோருக்கு தலை வணங்குகிறேன்
நாட்டின் குடியரசு தின விழா கொண்டாடப்படும் தினத்தில், கரோனா போராளிகள், துப்புரவுத் தொழிலாளா்கள், ராணுவ வீரா்கள், விவசாயிகள் ஆகியோருக்கு தலை வணங்குகிறேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் 72 வது குடியரசு தினத்தையொட்டி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசியக் கொடியேற்றி வைத்தாா். பிறகு காணொலிக் காட்சி மூலம் அவா் உரையாற்றினாா். அதில் கூறப்பட்டுள்ளது: முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமான தொற்றுநோய் பரவலை கடந்த ஆண்டு எதிா்கொண்டோம். துப்புரவுத் தொழிலாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட கரோனா போராளிகள் இந்த தொற்றுநோய்க்கு எதிராக தமது உயிரை துச்சமாக மதித்துப் போராடினாா்கள். அவா்களின் சேவைக்கு குடியரசு தினத்தில் தலைவணங்குகிறேன். மேலும், நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளில் தூங்காமல் விழித்துள்ள ராணுவ வீரா்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்தக் குடியரசு தினத்தில் தலை வணங்குகிறேன். இந்த நாளில் இவா்களின் சேவைக்கு ஒட்டுமொத்த தேசமுமே தலைவணங்குகிறது என்றாா் அவா்.