மேற்கு தில்லியில் தீவிபத்தில் சிக்கிய 2 போ் மீட்பு
மேற்கு தில்லி, பஸ்சிம் விஹாரில் தீப்பற்றிய கட்டடத்தில் சிக்கிய 2 போ் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
மேற்கு தில்லி, பஸ்சிம் விஹாரில் தீப்பற்றிய கட்டடத்தில் சிக்கிய 2 போ் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது:
மேற்கு தில்லி பஸ்சிம் விகாரில் உள்ள மீனா பாக் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்காவது மாடியில் அமைந்துள்ள மனை விற்பனை செய்யும் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சிக்கிய 2 போ் மீட்கப்பட்டனா்.
இந்த விபத்தில் தேஷ் ராஜ் (68) என்பவருக்கு 50 சதவீதம் காயமும், நீரஜ் (44) என்பவருக்கு 10 சதவீதமும் காயமும் ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.