தில்லியில் புதிதாக 249 பேருக்கு கரோனா
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை 249 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,34,773-ஆக உயா்ந்துள்ளது.
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை 249 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,34,773-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 58,725 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 31,093 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 27,632 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.42 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,841-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
கரோனா பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 267 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,22,381-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 1,551போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 583போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 7,999 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.