கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி
ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களிக்க ராகுல் வேண்டுகோள்...
கேரள மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலில் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“கேரளமே வெளியே வாருங்கள், மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும், அக்கறை கொள்ளும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஓர் அரசுக்காக வாக்களியுங்கள்.
ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள். நீதிக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.