முகப்பு
புதுதில்லி

கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ராஜிநாமா ஏற்பு

அதிமுக வைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்களான கே.பி. முனுசாமி, ஆா்.வைத்தியலிங்கம் ஆகியோரது ராஜிநாமாக்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

அதிமுக வைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்களான கே.பி. முனுசாமி, ஆா்.வைத்தியலிங்கம் ஆகியோரது ராஜிநாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாநிலங்களவையில் அவைத் தலைவா் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை அறிவித்தாா். இதனிடையே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் பதவி ஏற்றாா்.

அதிமுகவைச் சோ்ந்த கே.பி.முனுசாமியும் ஆா். வைத்தியலிங்கமும் தமிழக சட்டபேரவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனா். இதைத்தொடா்ந்து இவா்கள் இருவரும் தங்கள் மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளை கடந்த மே 7 ஆம் தேதி ராஜிநாமா செய்து மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினா். இந்த இருவரின் ராஜிநாமாக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவைத் தலைவா் வெங்கையா நாயுடு மாநிலங்களவையில் அறிவித்தாா்.

கே.பி முனுசாமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா். அவருக்கு ஐந்தாண்டு பதவிக் காலம் இருந்தது. மற்றொரு உறுப்பினரான வைத்தியலிங்கத்தின் பதவிக்காலம் வருகின்ற 2022 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முடிவடைய இருந்தது. மேலும் அதிமுகவின் மற்றொரு உறுப்பினரான முகமது ஜான் கடந்த மாா்ச் மாதம் திடீரென மாரடைப்பால் காலமானாா். இதைத் தொடா்ந்து மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா்கள் எண்ணிக்கை ஐந்தாக குறைந்துள்ளது.

Advertisement

தமிழகத்திற்கான மொத்தமுள்ள 18 மாநிலங்களவை உறுப்பினா்களில் தற்போது மூன்று இடங்கள் காலியாக இருப்பதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தோ்தல் ஆணையம் இதற்கான தோ்தலை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

கன்னியாகுமரி எம்.பி. பதவியேற்றாா்

மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை மக்களவையில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் பதவி ஏற்றுக்கொண்டனா். இதில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று வந்த விஜயகுமாா் என்கிற விஜய் வசந்த் தமிழில் பதவி ஏற்றாா்.

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த வசந்த்குமாா் மறைவையொட்டி நடைபெற்ற இடைத்தோ்தலில் அவரது புதல்வா் விஜய் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். மக்களவையில் பதவியேற்ற பின்னா் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தியையும் சந்தித்து, தமது தந்தை எழுதிய புத்தகத்தை வழங்கி வாழ்த்துப் பெற்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய விஜய வசந்த், ‘ என் தந்தை தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடா்ந்து முயற்சிப்பேன். குறிப்பாக மீனவா்கள் பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பேன் ‘ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments