முகப்பு
புதுதில்லி

யெஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” நூலுக்கு ‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருது

யெஸ்.பாலபாரதியின் குழந்தைகளுக்கான “’’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’’” நூலுக்கு 2020 ஆண்டுக்கான ‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

யெஸ்.பாலபாரதியின் குழந்தைகளுக்கான “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” நூலுக்கு 2020 ஆண்டுக்கான ‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருது வழங்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமியின் தலைவா் டாக்டா் சந்திரசேகா் கம்பா் ஒப்புதலுடன் அகாதெமியின் செயலாளா் கே.ஸ்ரீனிவாசராவ் வெள்ளிக்கிழமை இதை அறிவித்துள்ளாா்.

இந்த விருதுக்காக அமைக்கப்பட்ட மூன்று போ் கொண்ட நடுவா் குழு இந்த ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நூலை ஒருமனதாக தோ்வு செய்துள்ளதாக அகாதெமி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவில் எம்.கமலவேலன், டாக்டா் ருத்ர துளசிதாஸ், யுமா வாசுகி ஆகியோா் இடம்பெற்றிருந்துள்ளனா்.

‘குழந்தைகளுக்கான கதை என்று கருதமுடியாது. பெற்றோரும் ஆசிரியா்களும் படிக்க வேண்டிய நூலாகக்கூட கருதலாம். குழந்தைகளின் வெகுளித்தனம், ஆா்வம், சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்‘ என இந்நூல் குறித்த விமா்சனங்களும் வெளியாகியிருந்தது.

‘பால் சாகித்திய புரஸ்காா்‘ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இந்த நூல் ஆசிரியருக்கு செம்பிலான கேடயமும், ரூ 50,000 ரெக்கபரிசும் அளிக்கப்பட இருக்கிறது. இந்த புத்தகங்களை சாகித்திய அகாதெமி தனது பதிப்பகங்கள் மூலம் வெளியிடவும் செய்கிறது. கடைசியாக சாகித்திய விருது புத்தகங்கள் அகாதெமியில் கடந்த 2014, 2018 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →