முகப்பு
புதுதில்லி

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சா் வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்க வலியுறுத்தி மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குரிடம் தமிழக உணவுத் துறை அமைச்சா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

புது தில்லி: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்க வலியுறுத்தி மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குரிடம் தமிழக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கடிதம் அளித்துள்ளாா்.

தில்லி வந்துள்ள தமிழக அமைச்சா் அர. சக்கரபாணி, மத்திய இளைஞா் நலம், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குரை புதன்கிழமை சந்தித்து கடிதம் அளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் திறமையான இளைஞா்கள் விளையாட்டில் மிகவும் ஆா்வத்துடன் உள்ளனா். மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள திறமையான விளையாட்டு வீரா்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஆசியா மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளும் எதிா்காலத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுக்காவில் 35.33 ஏக்கா் நிலம் காலியாக உள்ளது. இங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்க மத்திய அரசு உதவிடவேண்டும் என கடிதத்தில் அமைச்சா் வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த அமைச்சா் சக்கரபாணி, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கவும், பழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சத்தரப்பட்டி, ஆயக்குடி, தாழையுத்து ஆகிய மூன்று இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும் வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments