சென்னையில் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்! அண்ணாமலை பங்கேற்பு!
சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் பற்றி...
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் மையக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக தலைமயிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று(ஏப். 3) வெளியானது.
மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசியில் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை.
Advertisement
பிரதமர் மோடி புதுச்சேரியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பின்னர் நேற்று இரவு சென்னையில் தங்கினார்.
தொடர்ந்து இன்று(ஏப். 4) காலை சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மையக்குழுவைச் சேர்ந்த 18 பேரும் இதில் கலந்துகொள்கிறார்கள். பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களும் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது.