சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?
மோசமாக செயல்படும் சிஎஸ்கே அணியின் கேப்டன், பயிற்சியாளர் குறித்து...
மோசமாக செயல்படும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிஙை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பந்துவீச்சில் மிகவும் மோசமாக செயல்பட்ட சிஎஸ்கே அணி 210 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தனது சொந்த மண்ணில் தோல்வியுற்று மீண்டும் அதிர்ச்சி அளித்தது.
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Advertisement
முக்கியமாக சிஎஸ்கே அணித் தேர்வு குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஏலத்திலும் நல்ல அனுபவம் மிக்க வீரர்களை எடுக்காமல், அனுபமற்ற பந்துவீச்சாளர்களை எடுத்தது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் யாரை பந்து வீச அழைப்பது என்பது தெரியாமல் திணறுகிறார். டி20 உலகக் கோப்பையில் பந்துவீசிய ஷிவம் துபேக்கு ருதுராஜ் அந்த வாய்ப்பை வழங்காதது பேசுபொருளாகியுள்ளது.
ஜடேஜாவுக்கு மாற்றாக ரூ.14 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர் இதுவரை ஒரு பந்து கூட வீசவில்லை என்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இதுவரை ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி மிக மோசமாகவே விளையாடியுள்ளது. கடைசி 6 போட்டிகளிலும் அவர் தலைமையில் தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பலரும் இது குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அம்பத்தி ராயுடு, “சென்னையின் உடல்மொழி சரியில்லை. அணித் தேர்வு, பேட்டிங் லைன் அப், அதைச் சரியாக உபயோகப்படுத்துவதில்லை, பந்துவீச்சிலும் மோசமாக செயல்படுகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்தால்தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற முடியும்” என்றார்.