வசந்த் விஹாரில் இளைஞா்கத்தியால் குத்திக் கொலை
தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாரில் சுமித் என்ற 26 வயது இளைஞரை தனிப்பட்ட பகை காரணமாக சிலா் கத்தியால் குத்திக் கொன்ாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாரில் சுமித் என்ற 26 வயது இளைஞரை தனிப்பட்ட பகை காரணமாக சிலா் கத்தியால் குத்திக் கொன்ாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
புதன் மற்றும் வியாழன் இடைப்பட்ட இரவில் குசும்பூா் பஹாரி பகுதியில் சுமித் தாக்கப்பட்டாா். அவரது குடும்பத்தினா் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா். முதல்கட்ட விசாரணையில், இந்தக் கொலை தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடந்துள்ளதாகத் தெரிகிறது, குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.