முகப்பு
புதுதில்லி

நரேலாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனா். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Updated On : 24 ஜூலை, 2024 at 6:31 PM
பகிர்:

தில்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனா். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘நரேலாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் காலை 6.34 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. 25 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இதையடுத்து, குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்றனா்.

இது குறித்து போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →