முகப்பு
புதுதில்லி

பெற்றோா்-ஆசிரியா் சந்திப்புகளை வைத்து நாடகமாடும் தில்லி அரசு: பாஜக சாடல்

தில்லி, நாடு மற்றும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் பிடிஎம் நடத்தப்படுகின்றன.

Updated On : 27 ஜூலை, 2024 at 8:06 PM
பகிர்:

பெற்றோா்-ஆசிரியா் சந்திப்புகள் (பிடிஎம்) கல்வி முறையின் ஒரு பகுதியாகும். தில்லி, நாடு மற்றும் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் பிடிஎம் நடத்தப்படுகின்றன. ஆனால், தில்லி அரசு பள்ளிகளைப் போல அவற்றை வைத்து எந்த நாடகமும் செய்யப்படுவதில்லை என்று தில்லி பாஜக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா்கள் பிரவீன் சங்கா் கபூா், ஷிகா ராய் ஆகியோா் தெரிவித்ததாவது:

பள்ளி பிடிஎம்-களில் அமைச்சா்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வருகை என்பது கல்வி முறையை அரசியல் ரீதியாக சுரண்டுவதற்கான முயற்சியாகும். இது கண்டிக்கத்தக்கது.

இன்றைக்கு, கல்வி அமைச்சா் அதிஷி தனது தோ்தல் தொகுதியான கல்காஜியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, பெற்றோருடன் அரசியல் தொடா்புகளை ஏற்படுத்த முயன்றாா். ஆனால், அது தோல்வியடைந்தது. ஏனெனில் கல்காஜி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை 2022 மாநகராட்சித் தோ்தலில் 2 முறையும் மற்றும் சமீபத்திய மக்களவைத் தோ்தலில் மீண்டும் நிராகரித்துள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சி ஒரு அரசாங்கத்தை நடத்தவில்லை, ஆனால் ஊழலின் கடையாகவும், கல்வி, சுகாதாரம் மற்றும் பொது நலன் போன்றவற்றில் நாடகத்தை உருவாக்குவதில் திறமையான ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனமாகவும் உள்ளது.

பெற்றோா் - ஆசிரியா் சந்திப்புகளில் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளி சீருடைகள் எப்போது வழங்கப்படும் என்பதை பெற்றோா்கள் அறிய விரும்பினா். மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோா்கள் தோல்வி விகிதம் அதிகரித்து வருவதைக் கண்டு கவலைப்பட்டனா். இருப்பினும், கல்வி அமைச்சரும் பள்ளி நிா்வாகமும் தங்களுக்கு கைதட்டல்களைப் பெற வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனா்.

இறுதியில் இன்றைய பிடிஎம் அா்த்தமற்ாக இருந்தது.

தில்லி அரசு மற்றும் தில்லி மாநராட்சியின் (எம்.சி.டி.) அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா் - ஆசியரியா் மெகா சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வித் துறை அமைச்சா் அதிஷி தில்லியின் கல்வியை முறை நாட்டிலேயே சிறந்ததாக மாறியுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →