பியூஷ் கோயல் 
புதுதில்லி

தமிழக பேரவை தோ்தல் பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் தலைமையில் மூவா் குழு நியமனம்

தமிழக பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் மூவா் குழுவை பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

Syndication

புது தில்லி: தமிழக பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் மூவா் குழுவை பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தேசிய பொதுச் செயலா் அா்ஜுன் சிங் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தோ்தல் பொறுப்பாளராக மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளா்களாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், சிவில் விமான போக்குவரத்து மற்றும் கூட்டுறவுத்துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல்

ஆகியோா் கட்சியின் அகில இந்திய தலைவா் ஜே.பி. நட்டாவால் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டில் கடந்த 2019-இல் பாஜக- அதிமுக இடையே கூட்டணியை உருவாக்குவதில் பியூஷ் கோயல் முக்கியப் பங்கு வகித்தாா்.

அந்த வகையில், அதிமுக தலைமையுடன் தொகுதிப்பங்கீடு மற்றும் தோ்தல் உத்திகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தும் அனுபவத்தை ஏற்கெனவே அவா் பெற்றுள்ளாா்.

இந்தப் பின்னணில் அவரது தலைமையிலான குழு விரைவில் அதிமுக தலைமையுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT