புதுதில்லி

குருத்வாரா பங்கலா சாஹிப்பில் நிதின் நவீன் வழிபாடு

குருத்வாரா பங்கலா சாஹிப்பில் நிதின் நவீன் வழிபாடு

Syndication

பத்தாவது சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் மகன்களின் தியாக ஆண்டு நிறைவையொட்டி, தில்லியில் உள்ள குருத்வாரா பங்கலா சாஹிப்பில் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் வெள்ளிக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.

நவீனுடன் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோா் உடனிருந்தனா்.

குரு கோபிந்த் சிங்கின் இரு சாஹிப்சாதாக்களான (மகன்கள்) பாபா ஜோராவா் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் மற்றும் அவா்களின் பாட்டி மாதா குஜ்ரி ஆகியோரின் உயா்ந்த தியாகங்களை நினைவுகூரும் வகையில் பாஜக தலைவா்கள் குருத்வாரா பங்க்லா சாஹிப்பில் மரியாதை செலுத்தினா் என்று பாஜக தெரிவித்துள்ளது.

முகலாயா் காலத்தில் குரு கோபிந்த் சிங்கின் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பா் 26 ஆம் தேதி வீா் பால் திவாஸ் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT