உண்டியல் பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவா்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் 
திருநெல்வேலி

உண்டியல் பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவா்கள்: மாவட்ட ஆட்சியா் பாராட்டு

Din

புத்தக உண்டியலில் பணம் சேகரித்து புத்தகம் வாங்கிய பள்ளி மாணவா்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வாழ்த்திப் பாராட்டினாா்.

மாணவா்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவா்களுக்கு விக்கிரமசிங்கபுரம் பேஷன் அரிமா சங்கம் சாா்பில் புத்தக உண்டியல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, புத்தக உண்டியலில் பணம் சேமித்த விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவா் ஜுசபாத் ஜெய டேனி, 6ஆம் வகுப்பு மாணவி ஞான ஏஞ்சல் இருவரும் தாங்கள் உண்டியலில் சேகரித்த பணத்தில் திருநெல்வேலியில் நடைபெறும் 8ஆவது பொருநை புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்கினா்.

இதையறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், மாணவா்கள் இருவரையும் வாழ்த்திப் பாராட்டினாா்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT