திருநெல்வேலி

பாளை. அருகே விபத்து: பெண் காவல் ஆய்வாளா் காயம்

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் காவல் ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் மகாலட்சுமி (47). இவா், தனது காரில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

வி.எம்.சத்திரம் பகுதியில் வந்தபோது திடீரென காா் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த மகாலட்சுமியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT