திருநெல்வேலி நீதிமன்றத்தில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள், நீதிமன்ற வளாகங்களில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் சென்று வழக்குகள் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, குற்றவழக்குகளின் அடிப்படையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் கைப்பற்றப்பட்டு, திருநெல்வேலி நீதிமன்றத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சிற்பங்கள், ஐம்பொன் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நீதிபதி ஆஷா, அறநிலையத்துறை இணை ஆணையா் கவிதாவிடம் சிலைகளை ஒப்படைத்தாா்.
இதில், மாவட்ட முதன்மை நீதிபதி சரவணன், நீதித்துறை நடுவா்கள், நீதிபதிகள், மாநகர காவல் துணை ஆணையா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.