நாகர்கோவிலில் விவசாய காங்கிரஸ் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாய காங்கிரஸ் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட விவசாய காங்கிரஸ் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். ராஜன் தலைமை வகித்தார், துணைத் தலைவர்கள் குமார், சிவபாலன், ராஜ்குமார், குமாரசுவாமி, கிஷோர், வட்டாரத் தலைவர்கள் டிட்டோ, ராஜேஷ், ஆன்றனி மைக்கேல், முருகேசன், பொன். ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வுக்குழு புறக்கணித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement