முகப்பு
கன்னியாகுமரி

புதைச் சாக்கடை பணி: நாகர்கோவிலில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் காரணமாக  நாகர்கோவில் ரயில் நிலையம் செல்லும் கம்பளம் சாலையில்

Updated On : 24 ஜனவரி 2019, 1:12 am IST
பகிர்:

புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் காரணமாக  நாகர்கோவில் ரயில் நிலையம் செல்லும் கம்பளம் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜன.25)  முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகர்கோவில் போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் நகரில் கம்பளம் சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் புதைச் சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஜன. 25 ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து கம்பளம் சாலை வழியாக ரயில் நிலையம்  செல்லும்  அனைத்து வாகனங்களும் கம்பளம், ஈத்தாமொழி பிரிவு, பறக்கை விலக்கு வழியாக இடது புறம் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.