முகப்பு
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் 74 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  தேசிய கொடியேற்றினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
சுதந்திர தினவிழாவில் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் 74 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  தேசிய கொடியேற்றினார்.

பின்னர் காவல் துறை யினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து  கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள்  மற்றும் அரசு அதிகாரிகளுக்கும்  மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் இன்றியும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இன்றியும் சுதந்திர தின விழா எளிமையாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.