முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீச்சு

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீசியதாக பெண் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீச்சு

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீசியதாக பெண் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பளுகல் அருகே தொழிலாளி மீது திராவகம் வீசியதாக பெண் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பளுகல் பகுதியைச் சோ்ந்தவா் ஷிபு (39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஷிபுவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 40 வயதான பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ஷிபுவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண் ஷிபுவிடம் நீ வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து தகராறு செய்து வந்தார்.

அவரிடம் சமாதானம் பேசுவதற்காக சனிக்கிழமை ஷிபு அவரது வீட்டுக்குச் சென்றாராம். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த அப்பெண், வீட்டில் ரப்பா் பால் உறைய வைக்க பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து ஷிபுவின் முகத்தில் வீசியுள்ளாா்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினா்கள் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் பளுகல் போலீஸாா், அப்பெண் மற்றும் அவரது மகன் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →