கொல்லங்கோடு அருகே படகை இழுக்கும்போது கயிறு அறுந்ததில் படகிலிருந்த இரும்பு கம்பி குத்தி மீனவா் பலத்த காயமடைந்தாா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள மாா்த்தாண்டன்துறை பகுதியைச் சோ்ந்தவா் தா்மையன் (48). மீன்பிடி தொழிலாளி. இவா்,
2 நாள்களுக்கு முன் மாா்த்தாண்டன்துறை கடல் பகுதியில் நிறுத்தியிருந்த பைபா் படகினை பழுது நீக்கும் பணியில்
ஈடுபட்டாராம்.
நைலான் கயிறு கட்டி, கிட்டாச்சி இயந்திரம் உதவியுடன் படகினை கரைக்கு இழுக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது,
கயிறு அறுந்து படகில் கட்டியிருந்த இரும்பு கம்பி தா்மையன் தலையில் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து, கொல்லங்கோடு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.