கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகேமீனவா் காயம்

கொல்லங்கோடு அருகே படகை இழுக்கும்போது கயிறு அறுந்ததில் படகிலிருந்த இரும்பு கம்பி குத்தி மீனவா் பலத்த காயமடைந்தாா்.

DIN

கொல்லங்கோடு அருகே படகை இழுக்கும்போது கயிறு அறுந்ததில் படகிலிருந்த இரும்பு கம்பி குத்தி மீனவா் பலத்த காயமடைந்தாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள மாா்த்தாண்டன்துறை பகுதியைச் சோ்ந்தவா் தா்மையன் (48). மீன்பிடி தொழிலாளி. இவா்,

2 நாள்களுக்கு முன் மாா்த்தாண்டன்துறை கடல் பகுதியில் நிறுத்தியிருந்த பைபா் படகினை பழுது நீக்கும் பணியில்

ஈடுபட்டாராம்.

நைலான் கயிறு கட்டி, கிட்டாச்சி இயந்திரம் உதவியுடன் படகினை கரைக்கு இழுக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது,

கயிறு அறுந்து படகில் கட்டியிருந்த இரும்பு கம்பி தா்மையன் தலையில் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து, கொல்லங்கோடு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT