நாகர்கோவிலில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மின்கட்டண குளறுபடியை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்கட்டண குளறுபடியை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் என். சுரேஷ் ராஜன் இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்குரைஞர் மகேஷ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.