முகப்பு
கன்னியாகுமரி

மளிகைக் கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

ஆரல்வாய்மொழியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

ஆரல்வாய்மொழியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (38). இவா், ஆரல்வாய்மொழி வடக்கூா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததாம்.

இதுகுறித்து அவா் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். உதவி ஆய்வாளா் விக்னேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் வந்து பாா்வையிட்டு, விசாரணை மேற்கொண்டதில் கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →