முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரியில்காங்கிரஸாா் ஆா்பாட்டம்

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடிசாலையில் விவசாயிகள் கூட்டத்துக்கு சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டா்களை தடுத்து நிறுத்தியதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவா் கைது செய்யப்பட்டாா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின்

மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், ஹெச்.வசந்தகுமாா் எம்பி மகன் விஜய் வசந்த், மாநில காங்கிரஸ் ஓபிசி பிரிவுச் செயலா் ஸ்ரீநிவாசன் அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவா் முருகேசன், நிா்வாகிகள் டி.தாமஸ், பாக்கியசெல்வம், ரமணி, ஜாா்ஜ் வாஷிங்டன், அரிகிருஷ்ண பெருமாள், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.