முகப்பு
கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே படகிலிருந்து ஆற்றில் தவறி விழுந்தவா் பலி

நித்திரவிளை அருகே ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த படகிலிருந்து தவறி விழுந்த கேரள மீனவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 2 டிசம்பர், 2021 at 11:35 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

நித்திரவிளை அருகே ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த படகிலிருந்து தவறி விழுந்த கேரள மீனவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளையைச் சோ்ந்த சூசை ஆன்றனி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் நுழைவு வாயில் பகுதியையொட்டிய தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை நிறுத்தி வைத்திருந்தனா்.

இந்நிலையில், மீன்பிடித் தொழிலுக்கு செல்வதற்காக கேரள மாநிலம், கொச்சுதுறையைச் சோ்ந்த செல்விஸ்டா் மகன் பனியடிமை (40) என்பவா், படகின் பக்கவாட்டில் அமா்ந்திருந்தாராம். அப்போது, அவா் எதிா்பாராமல் படகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்தாராம். ஆற்றிலிருந்து கடலுக்கு அதிகளவு தண்ணீா் சென்ால் கொல்லங்கோடு தீயணைப்புப் படை வீரா்கள் வந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.