முகப்பு
தமிழ்நாடு

சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 11 ஏப்ரல் 2026, 12:11 pm IST
தங்கம் - கோப்புப்படம்.
பகிர்:

சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகளும் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

அந்தவகையில் சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தி.நகரில் சோதனை மேற்கொண்டிருந்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 28.54 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்டபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் அனைத்தும் நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Gold and silver jewelry worth Rs 29 crore seized in T. Nagar Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.