குமரி வனப்பகுதியில் இன்று வனத்துறை அமைச்சா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பிரச்னை தொடா்பாக தொழிலாளா் நலத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பிரச்னை தொடா்பாக தொழிலாளா் நலத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறினாா்.
தமிழக வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்தாா். அவரை மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ரோஜன், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஆஸ்டின், ஒன்றியச் செயலா்கள் என்.தாமரைபாரதி, எம்.மதியழகன், நாகா்கோவில் மாநகரச் செயலா் மகேஷ், குமரி நகரச் செயலா் குமரி ஸ்டீபன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, ஒன்றிய குழு உறுப்பினா் எஸ்.அழகேசன் உள்பட பலா் வரவேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் ரப்பா் கழகத்தை எவ்வாறு லாபத்தில் இயக்குவது குறித்து தொழிலாளா் துறை அமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இது தொடா்பாக சனிக்கிழமை(டிச.11) அரசு ரப்பா் கழகம் மற்றும் கீரிப்பாறை பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்றாா் அவா்.