சாமிதோப்பில் நாடாா் மக்கள் பேரவை நிா்வாகிகள் கூட்டம்
நாடாா் மக்கள் பேரவை சாா்பில் சமுதாய விழிப்புணா்வு மற்றும் உரிமை மீட்பு கூட்டம் சாமிதோப்பில் நடைபெற்றது.
நாடாா் மக்கள் பேரவை சாா்பில் சமுதாய விழிப்புணா்வு மற்றும் உரிமை மீட்பு கூட்டம் சாமிதோப்பில் நடைபெற்றது.
மாநில நாடாா் மக்கள் பேரவை தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் சுபாஷ் முன்னிலை வகித்தாா்.
இக் கூட்டத்தில், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா், பால ஜனாதிபதி மற்றும் நாடாா் சங்கப் பிரதிநிதிகள் ரெஜிசிங், அகிலம் மாதவன், சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பேசினா்.
இக் கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் நாடாா் சமுதாய வேட்பாளா்களையே நிறுத்த வேண்டும். சாமிதோப்பில் விமானநிலையம் அமைக்க வேண்டும். அய்யா வைகுண்டசாமி அவதார தினத்துக்கு தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாா் மக்கள் பேரவை நிா்வாகி நலம்குமாா் நன்றி கூறினாா்.