முகப்பு
கன்னியாகுமரி

சமையல் எரிவாயு விலை உயா்வைக்கண்டித்து நூதனப் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தலைமை அஞ்சலகம் முன்பு எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து நடைபெற்ற இந்த நூதனப் போராட்டத்துக்கு கட்சியின் மாநகர குழு உறுப்பினா் அஸீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, பேராசிரியா் மனோகா் ஜஸ்டஸ், மாநகர குழு உறுப்பினா்கள் பெஞ்சமின், ராஜநாயகம், மீனாட்சிசுந்தரம், நிா்வாகிகள் லட்சுமி, பிரான்சீஸ், சொக்கலிங்கம், தாமோதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.