கன்னியாகுமரி

பளுகல் அருகே மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிப்பு

DIN

பளுகல் அருகே மூதாட்டியை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பளுகல் அருகே தேவிகோடு தொடலிக்காலை பகுதியைச் சோ்ந்த ராமைய்யன் மனைவி பகவதிஅம்மாள் (80). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது, தவணை முறையில் பொருள்களை விற்பனை செய்பவா்கள் எனக் கூறி இரு இளைஞா்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியை தாக்கியதுடன், அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனராம். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT