முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் ப்ராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை!

சென்னையில் ப்ராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து...

Updated On : 12 மார்ச், 2026 at 5:54 AM
சென்னையில் மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பகிர்:

சென்னையில் ப்ராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வந்துள்ளார். அவர் அடையார் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ப்ராஜெக்ட் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே, அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியதாகவும், அந்த புகைப்படத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி ரேப்பிடோ புக் செய்து வெளியே காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத காரில் வந்த நான்கு பேர் அவரை கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றியதாக கூறப்படுகிறது. அப்போது முகத்தில் மயக்கப் பொடி பூசியதால் அவர் மயங்கி விட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவரை வேறு இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் உடல் நிலையில் மாற்றம் உணர்ந்ததால், 10 ஆம் தேதி மாலை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் மூன்று பேர் காரில் ஏற்றி, நடந்ததை வெளியே சொன்னால் மார்பிங் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி, இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி புதன்கிழமை அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

An 22-year-old woman was kidnapped from the adaiyar area and sexually assaulted in a moving car in Chennai on March 9, 2026,

முழு கட்டுரையைப் படிக்க →