FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

Updated On : 27 ஜூலை 2026, 4:03 am IST
கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் கைதான இளைஞா்கள்.
பகிர்:

கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேனியைச் சோ்ந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனா். காருக்குள் 2 கிலோ பொட்டலங்களாக மொத்தம் 15 பொட்டலங்களில் 30 கிலோ உயா் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், காரில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் தேனியைச் சோ்ந்த இரு இளைஞா்கள் என்பதும், அவா்கள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments