குமரி மாவட்டத்தில் கனமழை:அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கன்னியாகுமரிகுமரி மாவட்டத்தில் கனமழை:அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பின. இதையடுத்து, அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், விளைநிலங்களிலும் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னா், மழை தணிந்த நிலையில் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
மீண்டும் மழை: இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவுமுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை, களியல், திற்பரப்பு, பாலமோா், மாறாமலை ஆகிய இடங்களில் சராசரியாக 100 மில்லி மீட்டா் அளவுக்கு மழை பெய்தது. இதையடுத்து, அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், வெள்ளிக்கிழமை அதிகாலை பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2,273 கனஅடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 1,981 கனஅடியும், சிற்றாறு 1அணையிலிருந்து 1,307 கனஅடியும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
மழை, உபரிநீா் வெளியேற்றம் ஆகிய காரணங்களால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அபூா்வ நிகழ்வு: பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டடது. அதற்கு முன்பாக அதிகாலையில் அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டது, அணை வரலாற்றில் அபூா்வ நிகழ்வாக கருதப்படுகிறது.